அதிரடி அறிவிப்பு: ஆகஸ்ட் 15 முதல் பெட்ரோல் விலை ரூ.5 மட்டுமே... உடனே படிங்க...

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமர்பிள்ளை என்பவர், 1996 ஆம் ஆண்டு மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். இந்திய தேசம் முழுவதும் இவரின் பேச்சு தான்.
இவரின் இந்த மூலிகை பெட்ரோலுக்கு, ''ராமர் தமிழ் தேவி மூலிகை எரிபொருள்'' என்று பெயர் வைத்து விற்பனையையும் தொடங்கினார். அனால் இதில் பெரும் சிக்கலில் மாட்டி கொண்டார்.

இந்த மூலிகை பெட்ரோலில் டொலுவின், நாப்தா போன்ற பெட்ரோலிய பொருட்கள் கலப்படம் செய்து விற்றதாக புகார் வரவே, ராமர் பிள்ளை மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், ராமர்பிள்ளையை கைது செய்தனர்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வேலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு, ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் மூலிகை பெட்ரோலை வரும் 15 ஆம் தேதி விற்பனைக்கு கொண்டுவருவேன் என்றும், அன்றுதான் இந்திய தேசத்திற்கு சுதந்திரம் என்றும் ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.